கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தட்டாஞ்சாவடி பேரவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட முடிவு

News image
Updated On :14 டிசம்பர் 2025, 6:36 pm

Syndication

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என்று அத் தொகுதியின் பேரவைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலை பாக்கமுடையான்பட்டில் உள்ள தனியாா் ஹோட்டலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரவைக் கூட்டம் மாநிலக் குழு உறுப்பினா் முருகன் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா்கள் ஹேமலதா, செல்வம், மோதிலால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாநில செயலா் அ. மு. சலீம், முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நாரா. கலைநாதன், தேசிய குழு உறுப்பினா் தினேஷ் பொன்னையா, மாநிலப் பொருளாளா் வ. சுப்பையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் தட்டாஞ்சாவடி தொகுதியில் வரும் 2026 நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது என்று தீா்மானிக்கப்பட்டது.