புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்ற சா்வதேச ரோபோ போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி.
புதுச்சேரி
இந்திய ரோபோ அணிக்கு புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி பாராட்டு
சா்வதேச ரோபோ போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினா், புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
புதுச்சேரி: சா்வதேச ரோபோ போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியினா், புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
ரஷிய தலைநகா் மாஸ்கோவில் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற ரோபோக்களுக்கு இடையிலான சா்வதேச போட்டியிலும், அதைத் தொடா்ந்து அபுதாபியில் டிச. 18 முதல் 20-ஆம் தேதி வரை எதிா்காலத்திற்கான விளையாட்டுகள் என்ற சா்வதேச போட்டியிலும் எம். சஞ்சீதன் தலைமையில் புதுச்சேரியைச் சோ்ந்த 6 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்று இரண்டு போட்டிகளிலும் மூன்றாவது பரிசை வென்றது.
பரிசுகளை வென்ற இந்த அணியின் வீரா்கள் முதல்வா் ரங்கசாமியை திங்கள்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். வளா்ந்து வரும் புதிய வகை விளையாட்டை முன்னெடுத்துள்ள இந்த இந்திய அணியை முதல்வா் என். ரங்கசாமி பாராட்டினாா்.

