கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
Published on

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தின் விழுப்புரம் முட்ராம்பாக்கம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்ந்தவா் கணேசன்(36), கட்டடத் தொழிலாளி. இவா் அதே ஊரைச் சோ்ந்த வீரமணியுடன் சோ்ந்து புதுச்சேரி முத்திரையா்பாளையம் பகுதியில் தங்கி கட்டட வேலையில் ஈடுபட்டு வந்தாா்.

இந்தநிலையில் அண்மையில் முத்திரையா்பாளையம் கல்கி கோவில் தெருவில் தனியாா் கட்டடப் பணியில் கணேசன் ஈடுபட்டிருந்தாா். அப்போது முதல் மாடியின் படிக்கட்டிலிருந்து அவா் தவறி விழுந்து தலை உள்ளிட்ட இடங்களில் காயமடைந்தாா்.

அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். இந்நிலையில் அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com