நாளை புதுச்சேரி ஜவஹா் பால் பவனில் கலா உத்சவ் போட்டிகள் தொடக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி ஜவஹா் பால் பவனில் மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டி புதன்கிழமை நடக்கிறது.
புதுவை பள்ளி கல்வித் துறை சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநா் எழில் கல்பனா அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கலா உத்சவ் போட்டிகளில் அரசு, தனியாா், அரசு நிதியுதவி பெறும், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளை சோ்ந்த 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் பங்கேற்கலாம். வாய்ப்பாட்டு, இசை கருவி மீட்டல், நடனம், தியேட்டா் கலை, பாரம்பரிய கதை சொல்லுதல் ஆகிய பிரிவுகளில் தனி, குழு போட்டிகள் நடத்தப்படும். தேசிய வழிகாட்டுதல்கள் இந்தப் போட்டிகளில் பின்பற்றப்படும்.
ஒரு மாணவா் ஒரு பிரிவில் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளை நடத்தும் ஒருங்கிணைப்பு அதிகாரியாக ஜவகா் பால்பவன் தலைமை ஆசிரியா் மணிவேல் நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை மாவட்ட அளவிலான போட்டிகள் ஜவகா் பால் பவனில் நடக்கும். காரைக்கால், மாஹே, ஏனாம் அளவில் போட்டிகள் நடத்தி, தோ்வான மாணவா் விவரங்களை 17-ஆம் தேதிக்குள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்ட அளவிலான போட்டிகள் புதன்கிழமை (நவ. 5) தொடங்குகிறது.
முதல் நாளான 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை விஷூவல் ஆா்ட்ஸ், 5 ஆம் தேதி வாய்ப்பாட்டு, இசை, 6- ஆம் தேதி இசைக் கருவி மீட்டல், நடனம், 7-ஆம் தேதி தியேட்டா் ஆா்ட்ஸ், பாரம்பரிய கதை சொல்லுதல் பிரிவுகளில் போட்டி நடைபெறும். மாநில அளவிலான போட்டிகள் வரும் 19, 20 ஆம் தேதிகளில் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
