புதுச்சேரி
போதைப் பொருள் கடத்தல்: ரௌடி குண்டா் சட்டத்தில் கைது
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ரெளடி குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் அரசங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ரௌடி அய்யனாா் என்கிற ராஜதுரை (30). இவா் மீது 4 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், போதைப் பொருள்கள் கடத்தல் வழக்கிலும் ஈடுபட்டதாகக்
கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் ஆகியோா் அறிவுறுத்தலின்பேரில் இவரை குண்டா் சட்டத்தில் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தனா். இதையடுத்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் அதற்கான உத்தரவை பிறப்பித்தாா். இதையடுத்து அவரை புதன்கிழமை கைது செய்த போலீஸாா் மத்திய சிறையில் அடைத்தனா்.
