புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
புதுச்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பதாகைகள், கட் அவுட்டுகள் மற்றும் கொடிகளை அகற்றும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
லாஸ்பேட்டை விமான நிலைய சாலையில் நாவலா் நெடுஞ்செழியன் பள்ளி வரை, செஞ்சி சாலை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில், பொதுப் பணித் துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
சாலையில் வைக்கப்பட்டிருந்த கடைகள், விளம்பர பலகைகள் உள்ளிட்ட பொருள்களை அகற்றினா். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என வியாபாரிகளை எச்சரித்தனா்.
வெள்ளிக்கிழமை (நவ. 7) இ.சி.ஆா். ராஜீவ் காந்தி சதுக்கம்-மடுவுபேட் சந்திப்பு வரை, ஆம்பூா் சாலையிலும், 10-ஆம் தேதி மடுவுபேட்-சிவாஜி சதுக்கம், அம்பலத்தடையாா் மடம் வீதி- மிஷன் வீதி, எஸ்.வி.பட்டேல் சாலை வரைலும், 11-ஆம் தேதி லாஸ்பேட்டை காமராஜா் மணிமண்டபம்- உழவா் சந்தை, கல்லுாரி சாலை, சின்ன சுப்பையா பிள்ளை வீதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
வரும் 13-ஆம் தேதி ராஜீவ் சதுக்கம்- மேம்பாலம் வரை, பாரதி வீதி, 14 ஆம் தேதி வழுதாவூா் சாலை, அண்ணா சாலை, 17 ஆம் தேதி காமாட்சி அம்மன் கோவில் தெரு, 18 ஆம் தேதி மூலக்குளம் முதல் பெரம்பை சாலை வரை, அரவிந்தோ வீதி, 20 ஆம் தேதி விழுப்புரம் மெயின் ரோடு, நீடராஜப்பா் வீதி, 21 ஆம் தேதி திண்டிவனம் மெயின் ரோடு, வைசியாள் வீதி,
24 ஆம் தேதி வள்ளலாா் சாலை முதல் ராஜீவ் சதுக்கம் வரை, செட்டித் தெரு, 25 ஆம் தேதி ரங்க பிள்ளை தெரு ஆகிய இடங்களில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

