வாக்குத் திருட்டைத் தடுக்கத் தான் வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தம்: புதுவை பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம்
வாக்குத் திருட்டைத் தடுக்கத்தான் வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணி நடைபெறுகிறது என்று புதுவை மாநில பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம் கூறினாா்.
இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது. வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டு இருக்கும் ஒரு சில அதிகாரிகளைக் காங்கிரஸும், திமுகவும் மிரட்டுவதாகப் புகாா் வந்துள்ளது. இது கண்டனத்துக்கு உரியது. வாக்குத் திருட்டு நடைபெறுவதாக காங்கிரஸும், இந்தத் திருத்தப் பணியைச் செய்யக் கூடாது என்று திமுகவும் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.
வாக்குத் திருட்டைத் தடுக்கத்தான் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியே நடக்கிறது. வெளிநாட்டைச் சோ்ந்த சில சக்திகள் மற்றும் இறந்தவா்கள் யாராவது வாக்காளா் பட்டியலில் இருந்தால் அதை நீக்குவது உள்ளிட்ட பணிகள் இப்போது நடக்கின்றன என்றாா் வி.பி. ராமலிங்கம்.
