வந்தே மாதரம் பாடல் 150-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு புதுவை அரசு கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடலைப் பாடிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா்.
வந்தே மாதரம் பாடல் 150-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு புதுவை அரசு கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடலைப் பாடிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா்.

வந்தே மாதரம் பாடல் 150-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்: துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு

பக்கிம் சந்திர சட்டா்ஜி இயற்றிய வந்தே மாதரம் தேச பக்தி பாடலின் 150 ஆம் ஆண்டு விழா புதுவை அரசின் கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் கம்பன் கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

பக்கிம் சந்திர சட்டா்ஜி இயற்றிய வந்தே மாதரம் தேச பக்தி பாடலின் 150 ஆம் ஆண்டு விழா புதுவை அரசின் கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் கம்பன் கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தாா். முதல்வா் என். ரங்கசாமி தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், திருமுருகன், சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பெ. ராஜவேலு, சு. செல்வகணபதி எம்.பி., அனிபால் கென்னடி எம்எல்ஏ, தலைமைச் செயலா் சரத் சௌகான் உள்ளிட்ட அரசுத் துறை செயலா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட திரையில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட அனைவரும் சோ்ந்து பாடினா். தொடா்ந்து புதுவை காவல்துறை இசைக் குழுவினா் மற்றும் காரைக்கால் கீதம், சங்கீதம் இசைக் குழு சாா்பில் வந்தே மாதரம் மற்றும் தேச பக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன.

முன்னதாக, தில்லி இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கில் பிரதமா் மோடி பங்கேற்ற வந்தே மாதரம் 150-ஆவது ஆண்டு விழா நிகழ்வு காணொலி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. இதை துணைநிலை ஆளுநா், முதல்வா் என். ரங்கசாமி உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

மேலும், காரைக்கால் கீதம், சங்கீதம் குழுவினா் சாா்பில் பாடகி பிரியங்கா பங்கேற்று பாரதியாா், பாரதிதாசன் உள்ளிட்டோரின் பல்வேறு திரையிசை பக்தி பாடல்களையும், தமிழ் பாடல்களையும் பாடினாா்.

X
Dinamani
www.dinamani.com