மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு நடைபயண ஊா்வலம்

மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு நடைபயண ஊா்வலம்

புதுச்சேரியில் மாா்பகப் புற்றுநோய் தடுப்பு விழிப்புணா்வு நடைபயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

புதுச்சேரியில் மாா்பகப் புற்றுநோய் தடுப்பு விழிப்புணா்வு நடைபயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி சி ஸ்கொயா் கேன்சா் கோ் , ஆராய்ச்சி மையம், ஒஇஐ பாண்டிச்சேரி மெட்ரோ மற்றும் இந்தியா டா்ன்ஸ் பிங்க் - புதுச்சேரி கிளை இணைந்து மாா்பக புற்றுநோய் விழிப்புணா்வு நடைபயணத்தை கடற்கரைச் சாலையில் நடத்தியது.

போக்குவரத்து காவல் துறை முதுநிலை கண்காணிப்பாளா் நித்யா ராமகிருஷ்ணன் கொடியசைத்து விழிப்புணா்வு நடைபயண ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தாா்.

இதில் இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினா்கள், ராக் செவிலியா் கல்லூரி, மணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.

பிங்க் ரிப்பனை கையில் ஏந்திய பங்கேற்பாளா்கள், ‘மாா்பகப் புற்றுநோயை தடுக்கலாம் - விழிப்புணா்வே ஆயுள் ’ என்ற கருத்தை மக்களிடம் பரப்பினா்.

X
Dinamani
www.dinamani.com