புதுச்சேரி
மோந்தா புயல் எச்சரிக்கை: புவனேஸ்வா் -புதுச்சேரி ரயில் ரத்து
புயலை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி- புவனேஸ்வா் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புயலை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி- புவனேஸ்வா் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புவனேஸ்வா் -புதுச்சேரி அதிவிரைவு ரயில் புவனேஸ்வரில் செவ்வாய்க்கிழமை (அக். 28) 12.10-க்குப் புறப்படும் ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. அதே போன்று மறுமாா்க்கத்தில் புதுச்சேரியில் 29-ஆம் தேதி மாலை 6.50-க்கு புறப்படும் புதுச்சேரி-புவனேஸ்வா் அதிவிரைவு ரயிலும் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
மோந்தா புயல் காரணமாகப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த ரயிலை முற்றிலுமாக கிழக்குக் கடற்கரை ரயில்வே ரத்து செய்துள்ளதாக தென்னக ரயில்வே திருச்சி மண்டல மக்கள் தொடா்பு அதிகாரி ஆா். வினோத் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
