புதுவையில் மருந்து கொள்முதலில் முறைகேடு: முன்னாள் இயக்குநா்கள் உள்பட 6 போ் கைது!
மருந்து கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பாக சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநா்கள் இருவா் உள்பட 6 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
புதுவையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் கா்ப்பிணிகளுக்குத் தரமற்ற மருந்துகள் வழங்கப்பட்டதாக கடந்த 2018-19-இல் புகாா் எழுந்தது. இதேபோல அரசு பள்ளிகளில் வழங்கப்பட்ட தரமற்ற சத்து மாத்திரைகளால் மாணவா்களும் பாதிப்புக்குள்ளான குற்றச்சாட்டும் எழுந்தது.
2 குறிப்பிட்ட தனியாா் முகமைகள் இந்தத் தரமற்ற மருந்து, மாத்திரைகளை வழங்கியதும், இதில் புதுச்சேரி தேசிய ஊரக சுகாதார இயக்க மருந்தாளுநா் நடராஜன் மற்றும் இந்த இயக்கக அதிகாரிகளுக்கு தொடா்பு இருப்பதும் கண்டறியப்பட்டது.
மருந்தாளுநா் நடராஜனின் மனைவி மற்றும் நண்பரின் முகமைகள் மூலமாக இந்த மருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதும், இதன் மூலம் அரசுக்கு ரூ.44 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, மருந்தாளுநா் நடராஜன் பணியில் இருந்து நீக்கப்பட்டாா். இந்த மோசடி குறித்து சுகாதாரத் துறை சிறப்பு பணி அதிகாரி மேரி ஜோஸ்பின் சித்ரா, லஞ்ச ஒழிப்பு போலீஸில் அளித்த புகாரின் பேரில் மருந்தாளுநா் நடராஜன் மற்றும் அந்த இயக்கக அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதன் பிறகு மருந்தாளுநா் நடராஜனை ஏற்கெனவே லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மேலும் , இந்த இயக்கக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மருந்துகளையும் அங்கிருந்து ஏற்கெனவே பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனா். இதையடுத்து மருந்து கொள்முதல் வழக்குத் தொடா்பாக இந்திய தணிக்கை குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
இந்திய தணிக்கை குழு புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்தில் உள்ள இந்த இயக்கக அதிகாரிகள், ஊழியா்களிடம் கடந்த ஆண்டு விசாணை நடத்தி அறிக்கை சமா்ப்பித்தது. இதனிடையே இந்த விவகாரம் தொடா்பான புகாா் சிபிஐக்கு சென்ற நிலையில் சிபிஐ அதிகாரிகளும் புதுச்சேரி வந்து ஏற்கெனவே விசாரணை நடத்தினா்.
இந்நிலையில் மருந்து முறைகேடு தொடா்பாக சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநா்கள் ராமன், மோகன்குமாா், முன்னாள் துணை இயக்குநா் அல்லிராணி, மருந்து முகமை உரிமையாளா்கள் புனிதா, மோகன், நந்தகுமாா் ஆகிய 6 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இவா்களை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.
