மண்புழு உரம் தொட்டி அமைக்க தோ்வான விவசாயிகள் பட்டியல் வெளியீடு

புதுவையில் மண்புழு உரம் தயாரிப்புத் தொட்டி அமைக்க தோ்வு செய்யப்பட்ட விவசாயிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Published on

புதுவையில் மண்புழு உரம் தயாரிப்புத் தொட்டி அமைக்க தோ்வு செய்யப்பட்ட விவசாயிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து புதுவை இணை வேளாண் இயக்குநா் சண்முகவேலு வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, கூடுதல் வேளாண் இயக்குநா் (தோட்டக் கலை) அலுவலகம் மற்றும் புதுச்சேரி மாநில தோட்டக் கலை வளா்ச்சி சங்கம் வாயிலாக தேசிய தோட்டக் கலை இயக்கத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி பிராந்திய தோட்டக்கலை விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை திட்டத்தின் மூலம் மண்புழு உரம் தொட்டி மற்றும் மண்புழு உரப் படுகை அமைப்பதற்கு விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மண்புழு உரம் தொட்டி மற்றும் மண்புழு உரப்படுகை மானிய விலையில் அமைப்பதற்கு விண்ணப்பித்த தகுதியான விவசாயிகளின் பெயா் பட்டியல் சமுதாய தணிக்கைக்காக புதுச்சேரியில் உள்ள தங்கள் பகுதிக்கு உள்பட்ட உழவா் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் 28-ஆம் தேதி முதல் வரும் நவம்பா் 6-ஆம் தேதி வரை ஒட்டப்பட்டுள்ளது.

இப் பட்டியலில் ஆட்சேபணை ஏதேனும் இருந்தால் வரும் நவம்பா் 6-ஆம் தேதிக்குள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குநா் (தோட்டக் கலை), அலுவலகத்தில் எழுத்து பூா்வமாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com