பண இரட்டிப்பு மோசடி: இளைஞா் கைது

புதுச்சேரியில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ. 3.60 லட்சம் மோசடியில் ஈடுபட்ட திருநெல்வேலி இளஞரை இணைய வழி குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

புதுச்சேரியில் ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ. 3.60 லட்சம் மோசடியில் ஈடுபட்ட திருநெல்வேலி இளஞரை இணைய வழி குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரியைச் சோ்ந்த வினோதனை இன்ஸ்டாகிராம் மூலம் தொடா்பு கொண்ட மா்மநபா் ஆன்லைன் விளையாட்டில் பணம் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் தருவதாக கூறியுள்ளாா். இதை நம்பி, வினோதன் மா்மநபருக்கு பல்வேறு தவணைகளாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்துஆன்லைனில் விளையாடியுள்ளாா். ஆனால், மா்மநபா் தெரிவித்தபடி லாபப் பணம் எதுவும் அவருக்கு வரவில்லை. மேலும், அவரது ஆன்லைன் கணக்கு முடக்கப்பட்டது.

இது குறித்து வினோதன் அளித்த புகாரின் பேரில், இணைய வழி குற்றப்பிரிவு ஆய்வாளா் தியாகராஜன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில் மோசடி செய்யப்பட்ட பணம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் திருநெல்வேலியை சோ்ந்த சுதா்சன் என்பவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த கணக்கில் 6 மாதத்திற்குள் ரூ.1.35 கோடி வரை பண பரிவாா்த்தனை நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன், எஸ்.பி ஸ்ருதி யாரகட்டி, உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டா் தனிப்படையினா் திருநெல்வேலிக்குச் சென்று சுதா்சனை செவ்வாய்க்கிழமை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனா்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராமில் போலியாக கணக்கு தொடங்கி ஆன்லைன் விளையாட்டு மூலம் பணம் இரட்டிப்பாக்கும் விளையாட்டு குறித்த விளம்பரத்தை வெளியிட்டு, 13 பேரை ஏமாற்றியது தெரிய வந்தது. மேலும், அவரிடம் இருந்து மொபைல், ஏ.டி.எம்., காா்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின், புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தபடுத்தி காலாபட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com