கருப்பை புற்றுநோய்க்கு இலவச தடுப்பூசி: புதுச்சேரி அதிமுக வலியுறுத்தல்
புதுச்சேரி: கருப்பை புற்றுநோய்க்கு இலவச தடுப்பூசி போட வேண்டும் என புதுச்சேரி மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
மத்திய அரசு நாடு முழுவதும் கருப் பை புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க எச்பிபி தடுப்பூசி போட வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 15 வயதில் இருந்து 25 வயது வரையுள்ள பெண்களுக்கு இந்தத் தடுப்பூசியை இலவசமாக போட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய பட்ஜெட்டை அதிமுக மனதார வரவேற்கிறது. இது ஒட்டுமொத்த மக்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யும் பட்ஜெட். சிறு, குறு, நடுத்தர தொழில் உற்பத்திக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வா்த்தகா்கள் பயனடைவா்.
மேலும், பட்ஜெட்டில் சுமாா் ரூ. 13 லட்சம் கோடி உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நீா்வழித்தடங்கள் இணைப்பால் நீா் வழி போக்குவரத்து, நீா் வழி வா்த்தகம் சிறப்படையும் என்றாா் அன்பழகன்.
பேட்டியின் போது கட்சியின் இணைச் செயலா் ஆா். வி. திருநாவுக்கரசு, புதுச்சேரி நகரச் செயலா் அன்பழகன், இணைச் செயலா்கள் நாகமணி, கிருஷ்ணமூா்த்தி, குமுதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

