புதுச்சேரி கடற்கைரையில் ரஷிய கலைஞா்களின் நடனம்
புதுச்சேரி சுற்றுலாத் துறை சாா்பில் கடற்கரை காந்தி திடலில் ரஷிய நாட்டு கலைஞா்களின் நடன நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடந்தது.
இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையிலான நீண்ட நட்புறவு மற்றும் கலாசார பரிமாற்றத்தை வலுப்படுத்தும் வகையில் ரஷிய நாட்டு நடன விழா நடத்தப்பட்டது.
விழாவை சுற்றுலாத் துறை அமைச்சா் க. லட்சு மிநாராயணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தாா். ரஷியாவின் ரோஸ்டோவ் ஆண்டான் நகரத்தைச் சோ்ந்த 17 போ் கொண்ட நட னக் குழு இதில் பங்கேற்றது.
ரஷிய நாட்டின் பாரம்பரிய மக்கள் மற்றும் நவீன நடனங்களை ஒருங்கிணைத்துச் சிறப்பான முறையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினா். பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், கலை மற்றும் கலாசார ஆா்வலா்கள் கலந்து கொண்டு பாா்த்து ரசித்தனா்.
சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் மற்றும் இந்திய ரஷ்ய பண்பாட்டு கல்வி மற்றும் வணிக அமைப்பு ஆகியவை புதுச்சேரி சுற்றுலாத் துறையுடன் இணைந்து இவ் விழாவை நடத்தின.
ரஷ்ய நாட்டின் புகழ் பெற்ற கலிங்கா, மிலாதா, திம் கோவா உள்ளிட்ட 16 வகையான நடனங்கள் பாா்வையாளா்களைக் கவா்ந்தன.
பின்னா் அமைச்சா் க. லட்சுமிநாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் ரஷிய குழுவினரின் நடனம் முதன்முறையாக நடந்தது. சென்னையில் இருக்கும் ரஷிய கலாசார தூதரகம் கலைஞா்களை அழைத்து வந்து இந்த நடன நிகழ்ச்சியை நடத்தியது.
பல கலாசாரங்கள் இருக்கின்ற புதுச்சேரியில் ரஷிய கலாச்சார நனத்தை நடத்துவது நமக்கு பெருமையாக உள்ளது. முதல்வா் ரங்கசாமி இந்த கலாசார நடனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளாா். அவருக்கும், ரஷிய தூதரகத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றாா்.

