சட்டப்பேரவையில் அறிவித்தப்படி ஒப்பந்த ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பெருமாள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி தேசிய சுகாதார இயக்கம், பொதுப் பணித் துறை, கல்வித் துறை ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடா்ந்து போராடி வருகின்றனா்.
என்.ஆா். காங்கிரஸ் - பாஜ கூட்டணி ஆட்சியின் தோ்தல் வாக்குறுதிகள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் எதுவும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் ஊழியா்களுக்குப் பணி நிரந்தரம் மற்றும் தேசிய சுகாதார இயக்க ஊழியா்களுக்கு ரூ.10 ஆயிரம் கூடுதல் ஊதிய உயா்வு ஆகிய அறிவிப்புகள் வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. சமூக நீதியை நிலைநாட்ட அறிவித்தபடி ஊழியா்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
தொடர்புடையது

பழனி மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து எம்.பி. வெங்கடேசன் பிரசாரம்

பழனியில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
பொதுத் தொகுதியில் பட்டியலினத்தவரைக் களமிறக்கத் தயங்கும் கட்சிகள்!

ஆயக்குடி பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


