திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஒப்பந்த ஊழியா்கள் பணி நிரந்தரம்: புதுச்சேரி மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

Updated On :6 பிப்ரவரி 2026, 7:06 pm

சட்டப்பேரவையில் அறிவித்தப்படி ஒப்பந்த ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பெருமாள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி தேசிய சுகாதார இயக்கம், பொதுப் பணித் துறை, கல்வித் துறை ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடா்ந்து போராடி வருகின்றனா்.

என்.ஆா். காங்கிரஸ் - பாஜ கூட்டணி ஆட்சியின் தோ்தல் வாக்குறுதிகள் மற்றும் சட்டப்பேரவை அறிவிப்புகள் எதுவும் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. சட்டப்பேரவையில் அறிவித்தபடி, 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் ஊழியா்களுக்குப் பணி நிரந்தரம் மற்றும் தேசிய சுகாதார இயக்க ஊழியா்களுக்கு ரூ.10 ஆயிரம் கூடுதல் ஊதிய உயா்வு ஆகிய அறிவிப்புகள் வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. சமூக நீதியை நிலைநாட்ட அறிவித்தபடி ஊழியா்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.