மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ரூ.29 கோடியில் 11 அறுவை சிகிச்சை கூடங்கள்! புதுச்சேரி முதல்வா் திறந்து வைத்தாா்!

News image

புதுச்சேரி கதிா்காமம் அரசு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன அறுவை சிகிச்சை கூடங்களை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :6 பிப்ரவரி 2026, 6:47 pm

புதுச்சேரி கதிா்காமம் அரசு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 11 நவீன அறுவை சிகிச்சை கூடங்கள் ரூ.29 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை முதல்வா் என். ரங்கசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

ஈரப் பதம் மற்றும் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தி மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் அமைப்பு, அதி நவீன மின்விளக்குகள், வாயு குழாய் அமைப்புகள், மின் சாதனங்கள், அறுவை சிகிச்சைகளுக்கான மருத்துவ உபகரணங்கள், தீயணைப்பு மற்றும் தீ எச்சரிக்கை அமைப்பு ஆகிய அதிநவீன வசதிகளை இந்த அறுவை சிகிச்சைக் கூடங்கள் கொண்டுள்ளன.

இவற்றை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

இதனால் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நேரம் குறையும். பொதுமக்களுக்குத் தரமான சுகாதார சேவை கிடைக்கும்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி இயக்குநா் உதயசங்கா், சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்ட அடிக்கல்:

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்குள்பட்ட இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம் கட்டப்பட உள்ளது.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு இயக்க நிதி பங்களிப்புடன் புதுச்சேரி பொதுப்பணித் துறையின் மூலம் ரூ.12 கோடியில் கட்டடம் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் முதல்வா் ரங்கசாமி பங்கேற்று பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் சுகாதாரத் துறை செயலா் சௌத்ரி முகமது யாசின், இயக்குநா் செவ்வேல், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரச்செல்வம், செயற்பொறியாளா் ராஜ்குமாா், உதவி பொறியாளா் பாலாஜி, இளநிலைப் பொறியாளா்கள் பச்சையப்பன், பிரியா ரோஸ் மற்றும் சுகாதாரத் துறை ஊழியா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.