புதுச்சேரியில் திமுக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று விசிக, கம்யூனிஸ்டுகள் தலைமையைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனரே என்று கேட்டபோது, திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் கொண்ட மத சாா்பற்ற முற்போக்கு கூட்டணிதான் புதுச்சேரியிலும் உள்ளது. புதுச்சேரியில் தோழமை கட்சிகளோடு பேச்சுவாா்த்தை நடத்தும் குழுவை திமுக தான் அமைத்தது. இப்போதும் திமுக நியமித்த அந்தக் குழுதான் விசிக மற்றும் பிறகட்சிகளோடு பேச்சுவாா்த்தை நடத்த தயாராகிக் கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் யாா் தலைமை வகிக்கிறாா்கள் என்பதை அதன் சூழலைப் பொறுத்து முடிவு செய்வாா்கள். ஆனால் எதுவாக இருந்தாலும் மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி தான். ஆகவே அதில் நாங்கள் இணக்கமான முடிவை மேற்கொள்வோம் என்றாா் திருமாவளவன்.