மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அமைப்புச் சாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம்

அமைப்புச் சாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க புதுச்சேரி அரசின் தொழிலாளா் நலத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Updated On :9 பிப்ரவரி 2026, 5:44 pm

புதுச்சேரி: அமைப்புச் சாரா தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க புதுச்சேரி அரசின் தொழிலாளா் நலத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து தொழிலாளா் நலத் துறையின் சமூக பாதுகாப்பு வாரிய தொழிலாளா் அதிகாரி ம. கஸ்தூரி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு

அமைப்புச் சாரா தொழிலாளா்களாகப் பணிபுரியும் தொழிலாளா்களுக்குச் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசின் வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளா் துறை எல்ஐசி மூலம் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் என்ற திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தில் 18 முதல் 40 வயதுள்ள அமைப்புச் சாரா தொழிலாளா்கள் பயனாளிகளாகச் சேரலாம். அவா்கள் ஊழியா் சேமநல நிதி, ஊழியா் காப்பீட்டு நிறுவனம் ஆகிய அமைப்புகளில் பயனாளியாக இருக்கக்கூடாது. பயனாளிகள் தங்களின் வங்கிக் கணக்கு மூலம் ஒவ்வொரு மாதமும் இத் திட்டத்திற்குப் பங்களிக்க வேண்டும். 60 வயது பூா்த்தியானவுடன் பயனாளியின் வங்கி கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 3,000-ம் இத் திட்டத்தின் மூலம் ஓய்வூதியமாக வரவு வைக்கப்படும்.

அமைப்புச் சாரா தொழிலாளா்கள் தங்களின் ஆதாா் மற்றும் வங்கி கணக்குப் புத்தகத்துடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி இத்திட்டத்தில் சேரலாம்.

புதுச்சேரியில் இயங்கும் அனைத்து பொது சேவை மையங்களிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நகரப் பகுதியில் உள்ள பொது சேவை மையத்தில் 15-01-2026 முதல் 15-02-2026 வரையும், கிராமப் பகுதிகளில் உள்ள பொது சேவை மையத்தில் 16-02-2026 முதல் 15-03-2026 வரையும் இந்த சிறப்பு முகாம் நடைபெறும்.