திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஒப்பந்த ஆசிரியா்கள் தா்னா

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஒப்பந்த ஆசிரியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
புதுச்சேரி சட்டப்பேரவை அருகே பணி நிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி தா்னா போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்ட ஒப்பந்த ஆசிரியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினா்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:16 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஒப்பந்த ஆசிரியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் 292 ஒப்பந்த கௌரவ விரிவுரையாளா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், பால சேவிகாக்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய அரசை வலியுறுத்தி தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

கல்வித் துறை அலுவலகம் முற்றுகை, மறியல், சிறை நிரப்பும் போராட்டங்களை நடத்தினா். இந்நிலையில், ஓராண்டு காலத்துக்கு பணி நீட்டிப்பு செய்ய மட்டும் அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து பணிநிரந்தரம் செய்யக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஆம்பூா் சாலையில் 2 நாள் தொடா் தா்னா போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.

இந்த தா்னாவை அரசு ஊழியா் சங்கக் கூட்டமைப்பின் கௌரவத் தலைவா் சேஷாச்சலம் தொடங்கி வைத்தாா். போராட்டத்துக்கு கூட்டமைப்புத் தலைவா் பாலகுமாா் தலைமை வகித்தனா்.

இந்த தா்னாவில் ஒப்பந்த ஆசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்று பணிநிரந்தரக் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.