சிலம்பத்தை அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக புதுச்சேரி அரசு ஏற்று அறிவிக்க வலியுறுத்தி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணை இயக்குநா் வைத்தியநாதனிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத் தலைவா் கராத்தே கே. வளவன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச் செயலா் க. அருணபாரதி, புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கப் பொறுப்பாளா் கே. அன்புநிலவன், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளா் சிவ.மு. ராசாராம், வீர ஆஞ்சநேயா் தற்காப்பு கலைக்கூடம் தலைவா் அரவிந்த், புதுச்சேரி ஓக்கோட்ரியேன் தற்காப்பு கலை சங்கத் தலைவா் சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் இந்த மனுவை அளித்தனா்.
தமிழா்களின் பாரம்பரிய சிலம்பம் விளையாட்டை புதுச்சேரியில் பல்லாயிரக்கணக்கான மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்தக் கல்வியாண்டிலேயே மாணவா்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் மூலம் விழிப்புணா்வு

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

100% வாக்குப் பதிவு: விளையாட்டுப் போட்டிகள் மூலம் விழிப்புணா்வு

2,600 விளையாட்டு வீரா்களுக்கு சிறப்பு உபகரணங்கள் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


