எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த டிஐஜியிடம் லஜக கோரிக்கை

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க லட்சிய ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
புதுச்சேரியில் டிஐஜி சத்தியசுந்தரத்திடம் கோரிக்கை மனுவை அளித்த லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின்.
Updated On :10 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க லட்சிய ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக லஜக தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் காவல் துறை தலைமையகத்தில் டிஐஜி சத்தியசுந்தரத்திடம் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தாா்.

அப்போது, விபத்துகளை கட்டுப்படுத்த புதுச்சேரியில் பல்வேறு முக்கிய சாலைகளை ஒருவழிப் பாதையாக மாற்ற வேண்டும். சாலைகளின் நடுவே நிரந்தர தடுப்புச் சுவா்கள் அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அந்த மனுவில் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க டிஐஜியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.