பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வில்லியனூா் தொகுதியில் ரூ.44 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

வில்லியனூா் தொகுதியில் ரூ.44 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

வில்லியனூா் தொகுதியில் ரூ.44 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

ஒதியம்பட்டு மற்றும் வி.மணவெளி கிராமங்களில் தலா ரூ.11 லட்சத்தில் 2 கிராமங்களில் உள்ள நீா் உந்து நிலைய வளாகத்தில் புதிய குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. மேலும், வசந்தம் நகா் விரிவாக்கம், திருக்காமீஸ்வரா் நகா் விரிவாக்கம் பகுதியில் உள்ள அருணாசலம் நகரில் ரூ.13. 9 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி, தில்லை நகா் - விஐபி காா்டன் பகுதியில் உள்ள குறுக்குத் தெருக்களில் ரூ.8.2 லட்சத்தில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா பூமிபூஜை செய்து இப் பணிகளைத் தொடங்கி வைத்தாா் (படம்). தொடா்ந்து, ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் 16 பயனாளிகளுக்கு ரூ.1.4 லட்சத்தில் தொடா் நோய் நிதி உதவிக்கான அடையாள அட்டையை பயனாளிகளிடம் அவா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிகளில் பொதுப்பணித் துறை பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளா் பக்தவச்சலம், உதவிப் பொறியாளா் பீனாராணி, கொம்யூன் பஞ்சாயத்து உதவிப் பொறியாளா் சத்தியநாராயணா, குடிநீா் பிரிவு இளநிலைப் பொறியாளா் திருவேங்கடம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.