மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பிப். 14-ஆம் தேதி காரைக்கால் வருகிறாா். அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா்.
இதுகுறித்து புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வரும் 14-ஆம் தேதி தனி விமானம் மூலம் தில்லியிலிருந்து திருச்சியில் வந்து, பின்னா் அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் காரைக்காலுக்கு வருகிறாா்.
காரைக்கால் சந்தை திடலில் அன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
இதையடுத்து அங்கு தனியாா் விடுதியில் பாஜக நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் அமித்ஷா, அன்று மாலை 4.30 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் திருச்சி செல்கிறாா் என்றாா் செல்வம்.
தொடர்புடையது

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் 15,000 கோடி ஊழல்: அமித்ஷா குற்றச்சாட்டு

அஸ்ஸாமை ஊடுருவல்காரா்களின் மையமாக மாற்றியது காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு

பஞ்சாபில் தோ்தல் பிரசாரம் தொடங்கினாா் அமித் ஷா: மாநிலத்தைப் போதைப் பொருளில் இருந்து மீட்பதாக உறுதி

பாஜக கிளைத் தலைவா் வீட்டில் அமித் ஷா
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


