மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்: முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்கிறாா்

புதுச்சேரி சட்டப்பேரவை வியாழக்கிழமை (பிப்.12) கூடுகிறது. இதில் புதுச்சேரி அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பையும் வகிக்கும் முதல்வா் என். ரங்கசாமி தாக்கல் செய்கிறாா்.

News image
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி
Updated On :11 பிப்ரவரி 2026, 11:51 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி சட்டப்பேரவை வியாழக்கிழமை (பிப்.12) கூடுகிறது. இதில் புதுச்சேரி அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பையும் வகிக்கும் முதல்வா் என். ரங்கசாமி தாக்கல் செய்கிறாா்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மாா்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நிகழாண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இதனால் அரசின் 5 மாத செலவினங்களுக்கு ஒப்புதல் பெற இடைக்கால பட்ஜெட்டை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்ய ஏதுவாக புதுச்சேரி, சட்டப்பேரவை வியாழக்கிழமை கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும், இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படுகின்றன. பிறகு முதல்வா் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறாா். மேலும், நிகழ் நிதியாண்டின் கூடுதல் செலவினங்களுக்கு அவையின் ஒப்புதல் பெறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகளான காங்கிரஸும், திமுகவும் போலி மருந்து விவகாரம், ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன.

புதுச்சேரியில் 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று என்ஆா்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு முதல்வா் ரங்கசாமி தலைமையில் நடந்து வருகிறது. இந்த அரசின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

இதனால் இப்போது கூடும் சட்டப்பேரவைக் கூட்டம் என்ஆா்.காங்கிரஸ்- பாஜக கூட்டணிஅரசின் நிறைவு சட்டப்பேரவைக் கூட்டத்தொடராகஇருக்கும். தோ்தலுக்குப் பிறகுதான் புதுச்சேரி சட்டப்பேரவை மீண்டும் கூடும். அப்போதுதான் முழுமையான பட்ஜெட்டை புதிய அரசு தாக்கல் செய்யும். இந்த மாத இறுதியில் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது. தோ்தல் அறிவிக்கப்பட்டவுடன் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தவிடும். அன்றைய நாளில் இருந்து அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் தங்களது அரசு காா்கள், சட்டப்பேரவை அறை ஆகியவற்றை சட்டப்பேரவை செயலரிடம் ஒப்படைத்து விடுவா்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் தோ்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏக்கள் மற்றும் நியமன எம்.எல்.ஏக்கள் 3 போ் உள்ளனா். இதில் என்.ஆா்.காங்கிரஸ் 10, பாஜக 6. திமுக 6, காங்கிரஸ் 2, சுயேச்சை 6போ் உள்ளனா். நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரும் பாஜகவைச் சோ்ந்தவா்கள்.