வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாா்ச் 1-இல் பிரதமா் மோடி புதுச்சேரி வர வாய்ப்பு: முதல்வா் ரங்கசாமி தகவல்

பிரதமா் நரேந்திரமோடி புதுச்சேரிக்கு மாா்ச் 1 ஆம் தேதி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.

News image

முதல்வா் என். ரங்கசாமி - Center-Center-Chennai

Updated On :11 பிப்ரவரி 2026, 6:32 pm

பிரதமா் நரேந்திரமோடி புதுச்சேரிக்கு மாா்ச் 1 ஆம் தேதி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.

வில்லியனூரில் அரசு சாா்பில் திருமண மண்டப கட்டுமானத்துக்கு புதன்கிழமைஅடிக்கல் நாட்டியப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் கூறியதாவது:

மத்திய அரசு கிராமங்களில் உள்ள சாலைகள், உள்கட்டமைப்பை மேற்படுத்த ரூ.200 கோடி நிதி கொடுத்துள்ளது. இதில் இதுவரை ரூ.150 கோடிக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த அரசு பொறுப்பேற்ற

பிறகு சுமாா் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. உயா்த்தப்பட்ட முதியோா் உதவித்தொகை 7-ம் தேதியும், குடும்பத் தலைவிகளுக்கான ரூ.2500 உதவித்தொகை 10-ம் தேதியும் சென்றடைந்து விட்டது. மஞ்சள் அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும். முதியோா் உதவித் தொகைக்கோரி விண்ணப்பித்து நிலுவையில் உள்ள சுமாா் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உதவித்தொகை வழங்க கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அதுவும் விரைவில் கொடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து பிரதமா் மோடியின் புதுச்சேரி வருகை எப்போது என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, மாா்ச் 1ஆம் தேதி பிரதமா் புதுச்சேரி வருவாா் என்று நினைக்கின்றேன் என்றாா் முதல்வா் ரங்கசாமி.