நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சட்டப்பேரவையிலிருந்து நேரு எம்எல்ஏ வெளியேற்றம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:58 pm

புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து சுயேச்சை எம்.எல்.ஏ ஜி. நேரு வியாழக்கிழமை வெளியேற்றப்பட்டாா்.

புதுச்சேரி சட்டப்பேரவையில், வியாழக்கிழமை முதல்வா் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தாா், தொடா்ந்து அமைச்சா்கள் தங்கள் துறைகளின் செலவினங்கள் குறித்த ஏடுகளைத் தாக்கல் செய்தனா். அப்போது எதிா்க்கட்சியினா் ஒட்டுமொத்தமாக எழுந்து ஏதோ பேச முற்பட்டனா். அப்போது , சுயேச்சை எம்எல்ஏ நேரு, தனது இருக்கையிலிருந்து எழுந்து சட்டப்பேரவைத் தலைவா் செல்வம் இருக்கையை நோக்கி சென்றாா். அவா் இருக்கை முன்பு நின்று சில கோஷங்களை எழுப்பினா். இதையடுத்து நேரு எம்எல்ஏவை வெளியேற்றும்படி பேரவைக் காவலா்களுக்கு சட்டப்பேரவைத் தலைவா் உத்தரவிட்டாா். இதையடுத்து நேரு எம்எல்ஏ சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டாா். பின்னா் சிறிது நேரம் கழித்து அவா் சட்டப்பேரவைக்குள் வந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாா்.