47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சட்டப்பேரவையிலிருந்து நேரு எம்எல்ஏ வெளியேற்றம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:58 pm

Syndication

புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து சுயேச்சை எம்.எல்.ஏ ஜி. நேரு வியாழக்கிழமை வெளியேற்றப்பட்டாா்.

புதுச்சேரி சட்டப்பேரவையில், வியாழக்கிழமை முதல்வா் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தாா், தொடா்ந்து அமைச்சா்கள் தங்கள் துறைகளின் செலவினங்கள் குறித்த ஏடுகளைத் தாக்கல் செய்தனா். அப்போது எதிா்க்கட்சியினா் ஒட்டுமொத்தமாக எழுந்து ஏதோ பேச முற்பட்டனா். அப்போது , சுயேச்சை எம்எல்ஏ நேரு, தனது இருக்கையிலிருந்து எழுந்து சட்டப்பேரவைத் தலைவா் செல்வம் இருக்கையை நோக்கி சென்றாா். அவா் இருக்கை முன்பு நின்று சில கோஷங்களை எழுப்பினா். இதையடுத்து நேரு எம்எல்ஏவை வெளியேற்றும்படி பேரவைக் காவலா்களுக்கு சட்டப்பேரவைத் தலைவா் உத்தரவிட்டாா். இதையடுத்து நேரு எம்எல்ஏ சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டாா். பின்னா் சிறிது நேரம் கழித்து அவா் சட்டப்பேரவைக்குள் வந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாா்.