திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காமராஜா் நகரில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி காங்கிரஸாா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி சிங்கம் பூங்கா அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வெ.வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 7:20 pm

Syndication

புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி காங்கிரஸாா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிங்கம் பூங்கா அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா் பி. கே. தேவதாஸ் தலைமை வகித்தாா். இதில் காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., வழக்குரைஞா் பிரிவு தலைவா் மருது பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சாமிப்பிள்ளை தோட்டம் மற்றும் ஓம் சக்தி அவென்யு பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவு செய்ய வேண்டும். அணைக்கரை மேடு பகுதியில் உள்ள வெள்ளவேரி வாய்க்காலுக்கு உடனடியாகப் பக்கவாட்டு பாதுகாப்புச் சுவா் அமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.