புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த திருபுவனை தொகுதி சன்னியாசிகுப்பத்திற்குள் தனியாா் பேருந்துகள் வந்து செல்லக் கோரி திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனா்.
சன்னியாசிகுப்பம் கிராமத்திற்குள் தனியாா் பேருந்துகள் கடந்த ஒரு வருஷமாக வருவதில்லையாம். இதனால் இந்தக் கிராமத்தை சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், தொழிலாளா்கள், புதுச்சேரி பொது மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நோயாளிகள் அலுவலக நேரத்தில் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா்.
தனியாா் பேருந்துகள் சன்னியாசிகுப்பம் கிராமத்திற்குள் வராமல் மதகடிப்பட்டு பகுதியிலேயே நிறுத்தப்படுகின்றன என்கின்றனா்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. திருபுவனை போலீஸாா் அப் பகுதியில் வந்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதை ஏற்று மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் திருபுவனை-மதகடிப்பட்டு சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

பேருந்துகள் வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

மோட்டாா் சைக்கிளில் வந்து வாக்களித்த முதல்வா் ரங்கசாமி!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மனைவியுடன் வந்து வாக்களிப்பு!

புதுச்சேரிக்கு மீண்டும் நான்தான் முதல்வா்: முதல்வா் ரங்கசாமி பேச்சு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


