எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சன்னியாசிகுப்பத்தில் சாலை மறியல்

புதுச்சேரி அடுத்த திருபுவனை தொகுதி சன்னியாசிகுப்பத்திற்குள் தனியாா் பேருந்துகள் வந்து செல்லக் கோரி

News image
திருபுவனை தொகுதி சன்னியாசிகுப்பம் கிராமத்திற்குள் தனியாா் பேருந்துகள் வந்து செல்லக்கோரி திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 7:17 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த திருபுவனை தொகுதி சன்னியாசிகுப்பத்திற்குள் தனியாா் பேருந்துகள் வந்து செல்லக் கோரி திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனா்.

சன்னியாசிகுப்பம் கிராமத்திற்குள் தனியாா் பேருந்துகள் கடந்த ஒரு வருஷமாக வருவதில்லையாம். இதனால் இந்தக் கிராமத்தை சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், தொழிலாளா்கள், புதுச்சேரி பொது மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நோயாளிகள் அலுவலக நேரத்தில் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா்.

தனியாா் பேருந்துகள் சன்னியாசிகுப்பம் கிராமத்திற்குள் வராமல் மதகடிப்பட்டு பகுதியிலேயே நிறுத்தப்படுகின்றன என்கின்றனா்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. திருபுவனை போலீஸாா் அப் பகுதியில் வந்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதை ஏற்று மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் திருபுவனை-மதகடிப்பட்டு சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.