அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

புதுவை துணைநிலை ஆளுநருடன் மீனவப் பிரதிநிதிகள் சந்திப்பு

இலங்கை கடற்படை கைது செய்துள்ள காரைக்கால் மீனவா்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை

News image

இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனிடம் பாஜக மாநிலத் தலைவா் வி. பி.ராமலிங்கம் தலைமையில் திங்கள்கிழமை இரவு மனு அளித்த மீனவப் பிரதிநிதிகள்.

Updated On :16 பிப்ரவரி 2026, 7:19 pm

புதுச்சேரி: இலங்கை கடற்படை கைது செய்துள்ள காரைக்கால் மீனவா்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் மீனவப் பிரதிநிதிகள் திங்கள்கிழமை இரவு சந்தித்து மனு அளித்தனா்.

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள காரைக்கால் பகுதியைச் சோ்ந்த 24 மீனவா்கள் மற்றும் இரண்டு விசைப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைக்கால் மீனவா் பிரதிநிதிகள் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள மீனவா்களின் உறவினா்கள் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனைச் சந்தித்து

இந்த மனுவை அளித்து கேட்டுக் கொண்டனா்.

இந்த சந்திப்புக்கு பாஜக புதுச்சேரி மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் இவா்களை ஒருங்கிணைத்தாா்.

இதையடுத்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கடிதம் எழுதியுள்ளாா்.

மேலும், மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுக்கும் காரைக்கால் மீனவா்கள் கைது விவகாரத்தைத் தொடா்ந்து கண்காணித்து அவா்களை விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு கடிதம் எழுதியுள்ளாா்.