காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

புதுச்சேரியில் தேசிய சுகாதார திட்ட ஊழியா்கள் போராட்டம் வாபஸ்

தேசிய சுகாதார திட்ட ஊழியா்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனா்.

News image
மாநில தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்ட ஊழியா்கள்.- கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 11:41 pm

Syndication

தேசிய சுகாதார திட்ட ஊழியா்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனா்.

புதுச்சேரி தேசிய சுகாதாரத் திட்ட ஊழியா்கள் சங்கத் தலைவா் ஜூலி சாரா, செயல் தலைவா் வெற்றி, பொதுச் செயலா் பிரகதீஸ்வரன், பொருளாளா் தனலட்சுமி ஆகியோா் கூட்டாக புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி சுகாதாரத் துறை தேசிய சுகாதார திட்ட ஊழியா்கள், பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயா்வு கோரி சுகாதாரத் துறை செயலா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

இதில், ஏற்கெனவே அரசு அறிவித்திருந்த சம்பள உயா்வுத் தொகையை உடனடியாக வழங்குவது, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட வேண்டிய 5 சதவீத ஆண்டு ஊதிய உயா்வையும் சோ்த்து வழங்குவது என ஒப்புதல் அளிக்கப்பட்டது. அரசின் இந்த உறுதிமொழியை ஏற்று தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என அதில் குறிப்பிட்டுள்ளனா்.