புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் தொடா் போராட்டம்

ஓராண்டுக்குப் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் தொடா் போராட்டத்தை வியாழக்கிழமையும் தொடா்ந்தனா்.

News image
ஒப்பந்த ஆசிரியா்கள் போராட்டம்- கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 11:45 pm

Syndication

ஓராண்டுக்குப் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த ஆசிரியா்கள் தொடா் போராட்டத்தை வியாழக்கிழமையும் தொடா்ந்தனா்.

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியா்களுக்கு ஓராண்டுக் காலம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை ஏற்க மறுத்து பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியா்கள் அறிவித்துள்ளனா்.

புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் 292 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த ஜன. 21முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், ஒப்பந்த ஆசிரியா்களுக்கு ஓராண்டுக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஏப். 1 முதல் அடுத்த ஆண்டு (2027) மாா்ச் 31 வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒப்பந்த ஆசிரியா்கள் அதனை ஏற்க மறுத்து, பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனா்.

இந்நிலையில் 30-ஆவது நாளாக பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் அமா்ந்து ஒப்பந்த ஆசிரியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தைத் தொடா்ந்தனா்.