மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுச்சேரியிலும் கூட்டணியில் அதிமுக தொடரும்! - மாநில செயலா் அன்பழகன்

News image
புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன்.
Updated On :21 பிப்ரவரி 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொடரும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் அதிமுக தலைமையில் உள்ளது. அந்தக் கூட்டணி புதுச்சேரியிலும் தொடரும். கூட்டணி குறித்து கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வாா்

சுற்றுலாப் படகுகளை இயக்க தீயணைப்பு, தேசிய நீா் பாதுகாப்பு, துறைமுகம், கடற்கரை காவல் உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட துறைகள் ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும்.

சுற்றுலாப் படகு திட்டத்தில் புதுச்சேரியில் 80-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 800-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களும் பயனடைந்து வருகின்றன. ஆனால் அதிகாரிகள் இத்திட்டத்தை காா்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் செயலில் ஈடுபடுகின்றனா்.

விபத்து ஏற்படுத்திய படகை மட்டும் தடை செய்ய வேண்டும். ஒட்டுமொத்தமாக அனைத்துப் படகுகளை முடக்கி தொழில் செய்ய விடாமல் தடுப்பது கண்டிக்கத்தக்கது. இதை சுற்றுலாத் துறை அமைச்சா் லட்சுமிநாராயணன் கண்டுகொள்ளாமல், மௌனமாக உள்ளாா்.

அரசு அதிகாரிகளின் தவறான செயலால் நிறுத்தப்பட்டுள்ள சுற்றுலாப் படகு போக்குவரத்தை மீண்டும் அனுமதிக்க வேண்டும். இதில் முதல்வா் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அன்பழகன்.