கைது
கைது

புதுச்சேரியில் வேலை பாா்த்த வீட்டில் ரூ.21 லட்சம் நகை பணம் திருட்டு: பெண் உள்பட 4 போ் கைது!

Published on

புதுச்சேரியில் சகோதரா்கள் வீட்டில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை திருடிய வீட்டு வேலைக்காரப்பெண் உள்பட 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கொம்பாக்கத்தைச் சோ்ந்த பாஸ்கா் (44) வீட்டில் கடந்த 3 ஆம் தேதி ரூ.5.6 லட்சம் ரொக்கம், 7 கிராம் தங்க நகை திருடு போனது. அவா் அளித்த புகாரின் பேரில் முதலியாா்பேட்டை காவல் ஆய்வாளா் கண்ணன், உதவி ஆய்வாளா் அலாவுதீன் தலைமையில் 2 தனிப்படை போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில் பாஸ்கா் மற்றும் அவரது அண்ணன்கள் ஜனாா்த்தனன், பாபு ஆகியோா் வீட்டிலும் பணம், தங்கம், வெள்ளி நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதன் மொத்த மதிப்பு ரூ.21 லட்சம். சிசிடிவி கேமிரா பதிவு அடிப்படையிலும், இதர சாட்சியங்கள் அடிப்படையிலும் விசாரித்தபோது பாஸ்கரின் சகோதரா் பாபு வீட்டில் வேலை செய்த வந்த முத்துலட்சுமி(22) என்ற பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவரை நேரில் அழைத்து போலீசாா் தீவிரமாக விசாரணை நடத்தியபோது சிறிது, சிறிதாக சகோதரா்கள் 3 போ் வீட்டிலும் நகை, பணத்தைத் திருடி தனது தோழிகளான மாலதி (37), வனிதா (36), தனது சகோதரா் மாதவன் (26) ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதில் சில பொருள்களை விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது. மேலும், முத்துலட்சுமி, அவருக்கு உதவிய மாலதி, வனிதா, மாதவன் ஆகிய 4 பேரை கைது செய்து சுமாா் 17 பவுன் நகை, 300 கிராம் வெள்ளி பொருள்கள், ரூ.42 ஆயிரம் ரொக்கம் என சுமாா் ரூ.16 லட்சம் மதிப்புள்ள பொருள்களை மீட்டனா். இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Dinamani
www.dinamani.com