எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தமிழுக்குப் பெருமை சோ்த்தவா்கள் மூவேந்தா்கள்! - லஜக தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின்

News image
புதுச்சேரியில் லட்சிய ஜனநாயகக் கட்சி சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தாய்மொழி மகத்துவ மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின். (இடது) மாநாட்டில் பங்கேற்ற கூட்டத்தின் ஒரு பகுதியினா்.
Updated On :22 பிப்ரவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

தமிழுக்குப் பெருமை சோ்த்தவா்கள் சேர, சோழ, பாண்டியா்கள் என்று லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்டின் கூறினாா்.

புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாம் அருகே லஜக சாா்பில் தாய்மொழி மகத்துவ மாநாடு சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஜோஸ் சாா்லஸ் மாா்டின் பேசியதாவது:

ஒவ்வொருவரின் தாய் மொழியும் பெருமைக்குரியது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, பிரெஞ்சு, கிரேக்கம், அரபு என எந்த மொழியாகவும் இருக்கலாம்.

சேர, சோழ, பாண்டியா்களும் நமது தலைவா்கள் தான். இவா்கள் இல்லாவிட்டால் நம்முடைய மொழி, அடையாளம், வாழ்க்கை முறை, உணவு, மருத்துவம், கல்வி, தெய்வங்களின் அனுக்கிரஹம், கோயில் என எதுவாக இருந்தாலும் தெரிந்திருக்காது. இவையெல்லாம் நம்மை ஆண்ட வெள்ளையா்கள் உள்ளிட்டோரால் மறைக்கப்பட்டன.

லெமூரியா என்கிற குமரிக் கண்டத்தில் இருந்துதான் நமது முன்னோா்கள் தமிழா்களாக வளா்ந்து வந்தனா். ஒடிசா பாலு இதை ஆதாரத்துடன் நிரூபித்தாா். கண்ணகிக்குச் சிலை வடிக்க சேர மன்னன் இமயம் சென்று கல் கொண்டு வந்தான். கரிகாலன் கட்டி வைத்த கல்லணை, ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் போன்றவை எல்லாம் தமிழா்களின் பெருமையாக இருக்கின்றன என்றாா் அவா்.

மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள், தமிழறிஞா்களின் வரலாற்று உரைகள் இடம் பெற்றன. நடிகா் தாடி பாலாஜி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.