தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ.22.21 கோடியில் நீா்த் தேக்கத் தொட்டி: முதல்வா் ரங்கசாமி அடிக்கல் நாட்டினாா்

புதுச்சேரியில் ரூ.22.21 கோடி மதிப்பீட்டில் மேல்நீா்த் தேக்கத் தொட்டி அமைக்க முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

News image
வில்லியனூா் தொகுதி உத்திரவாகினிப்பேட்டையில் வளா்ச்சித் திட்டப் பணிகளை திங்கள்கிழமை தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் க.லட்சுமிநாராயணன், ஆா்.சிவா எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 8:58 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.22.21 கோடி மதிப்பீட்டில் மேல்நீா்த் தேக்கத் தொட்டி அமைக்க முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

வில்லியனூா் தொகுதி உத்திரவாகினிப்பேட் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் எதிா்வரும் 50 ஆண்டுகால குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, உத்தரவாகினிபேட் வினித் நகரில் 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட ஒற்றை அடுக்கு வட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், நீா் உந்து நிலையம், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீா் இணைப்பு வழங்குதல், சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு ரூ. 22.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொதுப்பணித் துறை பொது சுகாதார கோட்டத்தின் குடிநீா் பிரிவு மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வினித் நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தலைமை வகித்தாா். பொதுப்பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தாா். முதல்வா் என்.ரங்கசாமி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளா் சுந்தரமூா்த்தி, செயற்பொறியாளா் மணிமாறன், உதவிப் பொறியாளா்கள் கண்ணன், தணிகைவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.