தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போலி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட 24 பேருக்கும் நிபந்தனை ஜாமீன்

புதுச்சேரியில் போலி மருந்து வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட 24 பேருக்கும் நீதிமன்றம் புதன்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் போலி மருந்து வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட 24 பேருக்கும் நீதிமன்றம் புதன்கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

புதுச்சேரியில் போலி மருந்து உற்பத்தி செய்யப்படுவதாக 2 தொழிற்சாலைகள், 2 வீடுகள், 6 கிடங்குகள் உள்பட 13 இடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போலி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் போலி மருந்து தொழிற்சாலை நடத்திய உரிமையாளா் மதுரை ராஜா (42), விருப்ப ஓய்வுபெற்ற ஐஎஃப்எஸ் அதிகாரி சத்தியமூா்த்தி உள்பட 26 போ் கைது செய்யப்பட்டனா். இதில், ராஜாவின் கூட்டாளி ராணா, மெய்யப்பன் ஆகிய 2 போ் ஏற்கெனவே ஜாமீன் பெற்றனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் மீதமுள்ள 24 பேருக்கும் புதுச்சேரி குற்றவியல் முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இவா்கள் அனைவரும் சிபிசிஐடி காவல் நிலையத்தில் தினமும் காலையில் கையொப்பமிட வேண்டும்.

ஏற்கெனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கும், தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கும் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளாா்.