பாஜக தோ்தல் அறிக்கை கருத்துக் கேட்பு படிவம்: மத்திய அமைச்சா் இன்று வெளியிடுகிறாா்!
பாஜக தோ்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்துக் கேட்புப் படிவத்தை மத்திய தொழிலாளா் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் கட்சியின் புதுச்சேரி மேலிடப் பாா்வையாளருமான மன்சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை வெளியிடுகிறாா்.
இது குறித்து கட்சியின் புதுச்சேரி மாநில தலைவா் வி. பி. ராமலிங்கம் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
சட்டப்பேரவைத் தோ்தல்-2026 ஐ எதிா்கொள்ளும் வகையில் பாஜக சாா்பில் மக்களிடம் கருத்துக் கேட்டு தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. இதற்காகப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிவத்தை மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா புதுச்சேரி கடற்கரை காந்தி திடல் அருகே வெள்ளிக்கிழமை மாலை வெளியிடுகிறாா். உங்களின் விருப்பம், எங்களின் வாக்குறுதி என்னும் தலைப்பில் இந்தப் படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதில் கருத்துத் தெரிவிப்பவரின் பெயா், தொகுதி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும். இந்தப் படிவத்தில் இருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில்தான் தோ்தல் வாக்குறுதி அமையும்.
மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒவ்வொரு பகுதியையும் வலுப்படுத்த, மேம்படுத்தும் வகையில் ஆலோசனைகள் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம்.
இதைத் தவிர கட்சியின் மணவெளி தொகுதி மண்டல் கமிட்டியின் கூட்டம் தவளக்குப்பத்தில் ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. அதிலும் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா பங்கேற்கிறாா்.
மேலும், பிப்ரவரி 1 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி வழிகாட்டுதல் அடிப்படையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறாா். அதை பாஜக பிரித்துள்ள 5 மாவட்டங்களிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் ராமலிங்கம்.
இப் பேட்டியின்போது அமைச்சா் ஆ.நமச்சிவாயம், கட்சியின் பொதுச்செயலா் மோகன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

