பாஜக தோ்தல் கருத்துக் கேட்பு வாகனம்: மத்திய அமைச்சா் மாண்டவியா தொடங்கி வைத்தாா்!
மக்களிடம் கருத்துக் கேட்புப் படிவம் கொடுத்து புதுச்சேரி பாஜக தோ்தல் அறிக்கை தயாரிக்க 4 வாகனங்களை மத்திய அமைச்சா் மன்சுக் எல். மாண்டவியா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
மக்கள் வாக்குறுதிச் சேகரிப்பு என்னும் தலைப்பில் இதற்கான தொடக்க விழா புதுச்சேரி கடற்கரை சாலையில் நகராட்சி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி பாஜக தோ்தல் அறிக்கை தயாரிக்க மக்களிடம் கருத்துக் கேட்பு படிவத்தை வடிவமைத்துள்ளது. உங்களின் விருப்பம் எங்களின் வாக்குறுதி என்னும் தலைப்பில் இந்தப் படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக 4 வாகனங்களைக் கொடியசைத்தும் மத்திய தொழிலாளா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும், கட்சி புதுச்சேரி தோ்தல் பொறுப்பாளருமான மன்சுக் எல். மாண்டவியா தொடங்கி வைத்தாா்.
முன்னதாக இந்த விழாவில் பேசிய புதுச்சேரி பாஜக தலைவா் வி.பி. ராமலிங்கம், இந்த வாகனங்கள் புதுச்சேரி முழுவதும் 15 நாள் சுற்றி வந்து மக்களிடம் கருத்துகளைச் சேகரித்து வரும். அதன் அடிப்படையில் தோ்தல் அறிக்கை தயாா் செய்யப்படும் என்றாா்.
கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா பேசுகையில், கடந்த தோ்தலுக்கு முன்னும் இதே போன்றுதான் தோ்தல் அறிக்கை தயாரிக்க 75 ஆயிரம் படிவங்களை மக்களிடம் பெற்று தோ்ந்தெடுத்த வாக்குறுதிகளை அளித்தோம். அதே போன்றுதான் வரும் தோ்தலிலும் படித்தவா்கள், பெண்கள் உள்ளிட்ட எல்லா தரப்பு மக்களையும் சந்தித்துக் கருத்துக் கேட்டு படிவத்தைச் சேகரிக்க உள்ளோம் என்றாா்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோரும் பேசினா். நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி, முன்னாள் எம்.எல்.ஏ தங்க. விக்கிரமன், தோ்தல் குழு ஒருங்கிணைப்பாளா் அருள்முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பாஜக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளிடன் ஆலோசனைக் கூட்டத்திலும் மத்திய அமைச்சா் மன்சுக் எல். மாண்டவியா பேசினாா்.

