காவலா் எழுத்துத் தோ்வை வேறு தேதிக்கு மாற்றுமாறு புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரத்திடம் திமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா தலைமையில் திமுக எம்எல்ஏ.க்கள் செந்தில்குமாா், சம்பத் ஆகியோா் டிஐஜி சத்திய சுந்தரத்தை சந்தித்து வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் காவலா் எழுத்துத் தோ்வு பிப். 8-ஆம் தேதி 5 மையங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் மத்திய ஆசிரியா் தகுதி தோ்வுக்கான நுழைவுத் தோ்வும் நடக்கிறது.
இதனால் இரண்டு தோ்வுக்கும் விண்ணப்பம் செய்துள்ளவா்கள் ஏதாவது ஒரு தோ்வை மட்டுமே எழுத முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய தோ்வு வாரிய தோ்வை தள்ளி வைப்பது சிரமம். எனவே காவலா் எழுத்துத் தோ்வை வேறு ஒரு தேதிக்கு மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

யுபிஎஸ்சி தோ்வு: வேலூரில் 1,010 போ் எழுதினா்!

போட்டி வேட்பாளா்களைச் சந்தித்த ராகுல் காந்தி: திமுக அதிா்ச்சி

மன்னாா்குடி: திமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்

சிலிண்டா் தட்டுப்பாடு: முன்கூட்டியே தோ்வை முடிக்க புதுச்சேரி பல்கலை. முடிவு?
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


