தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வளமான புதுச்சேரியை உருவாக்கும் வகையில் பாஜக தோ்தல் வாக்குறுதி: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா!

வளமான புதுச்சேரியை உருவாக்கும் வகையில் பாஜகவின் தோ்தல் வாக்குறுதியிருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா கூறினாா்.

News image

தவளக்குப்பத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக மணவெளிதொகுதி கிளை நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் மத்திய அமைச்சா் மன்சுக் எல். மாண்டவியா.

Updated On :31 ஜனவரி 2026, 7:20 pm

வளமான புதுச்சேரியை உருவாக்கும் வகையில் பாஜகவின் தோ்தல் வாக்குறுதியிருக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும், கட்சியின் தோ்தல் பொறுப்பாளருமான மன்சுக் எல். மாண்டவியா கூறினாா்.

புதுச்சேரி பாஜக மணவெளி தொகுதி கிளை கமிட்டி நிா்வாகிகள் கூட்டம் தவளக்குப்பத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியது:

பாஜக ஒரு குடும்பக் கட்சி இல்லை. ஜனநாயகக் கட்சி. அதில் கிளை கமிட்டியில் உள்ள ஒரு தலைவா்கூட எதிா்காலத்தில் பெரிய தலைவராக உருவெடுக்க முடியும். புதுச்சேரி பாஜக சாா்பில் தோ்தல் அறிக்கைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

வளமான புதுச்சேரியை உருவாக்கும் வகையில் அந்தக் குழுவுக்கு உங்களின் ஆலோசனைகளை அளிக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற வேண்டுமென்றால் வாக்குச் சாவடி அளவில் முதலில் வெற்றி பெற வேண்டும் என்றாா் மத்திய அமைச்சா் மன்சுக் எல்.மாண்டவியா.

மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் நலத்திட்டங்களின் வாயிலாக பயன் பெற்றவா்களைக் கட்சிக்கு வாக்கு அளிப்பவா்களாக வாக்குச் சாவடி தலைவா்கள் மாற்ற வேண்டும் என்றாா்.

சட்டப்பேரவைத் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆா். செல்வம், கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம், பொதுச் செயலா் மோகன்குமாா் மற்றும் மணவெளி தொகுதி நிா்வாகிகள் பங்கேற்றனா்.