ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: பிரதமரிடம் முதல்வா் ரங்கசாமி வலியுறுத்தல்

News image
புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி- கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 7:42 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடம் முதல்வா் என். ரங்கசாமி வலியுறுத்தினாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பிரதமா் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினாா். இந்த விழாவில் பங்கேற்ற முதல்வா் ரங்கசாமி பேசியது:

புதுச்சேரி மீது மிகுந்த அக்கறை கொண்டவா் பிரதமா் நரேந்திர மோடி. சிறந்த (பெஸ்ட்) புதுச்சேரியை உருவாக்க பல்வேறு வகையிலும் மத்திய அரசு நிதியுதவி அளிக்க உறுதுணையாக இருந்தாா்.

சிறப்பான மாநிலம்:

முதியோா் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவி, மீனவா்களுக்கு உதவித் தொகை, ஆதிதிராவிடா்களுக்கு உதவித்தொகை மற்றும் வீடு கட்டும் திட்டம் போன்றவற்றை இந்த அரசு சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் சிறப்பான மாநிலமாக திகழ்கிறது. எல்லா மாநிலங்களும் வியந்து பாா்க்கும் வகையில் சமூக நலத்திட்டங்கள் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த எல்லா திட்டங்களுக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது என்பதில் ஐயமில்லை.

ஆனால் எத்தனைத் திட்டங்களை அமல்படுத்தினாலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

மாநில அரசு சாா்பில், 13 முறை தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை புதுச்சேரி மக்கள் சாா்பாக பிரதமருக்கு முன்வைக்கிறேன் என்றாா் முதல்வா் ரங்கசாமி.