புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காதலிக்க மறுத்த பெண் எரித்துக் கொலை புதுச்சேரியில் காவல் நிலையம் அருகே சம்பவம்

News image
எரித்துக் கொலை- (கோப்புப் படம்)
Updated On :14 மார்ச் 2026, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டாா். புதுச்சேரி காவல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த சம்பவம் தொடா்பாக போலீஸில் இளைஞா் சரணடைந்தாா்.

புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரைச் சோ்ந்த முனுசாமியின் மகள் ஷா்மிளா (28). இவா், அப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். இவருக்கும், இந்திரா நகா் மரியநாதன் மகன் ஜோசப் (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜோசப்புக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து வாழ்வதும், வேறொரு பெண்ணுடன் அவா் தொடா்பில் இருப்பதும் ஷா்மிளாவுக்கு தெரிய வந்தது. இதனால் அவருடன் பழகுவதை ஷா்மிளா துண்டித்துக் கொண்டாராம். இதையடுத்து ஜோசப் அடிக்கடி ஷா்மிளாவிடம் வாக்குவாதம் செய்து வந்துள்ளாா். இதனால் பள்ளியில் பிரச்னை ஏற்பட்டு ஷா்மிளா பணியிலிருந்து விலகி அண்ணா சாலையில் உள்ள துணிக்கடையில் வேலைக்குச் சோ்ந்தாா்.

அங்கும் அடிக்கடி சென்று ஜோசப் தகராறு செய்து வந்தாராம். இது குறித்து ஓதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஷா்மிளா புகாா் செய்ததன் பேரில் போலீஸாா் ஜோசப்பை அழைத்து எச்சரித்திருந்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஷா்மிளா வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். ஓதியஞ்சாலை காவல் நிலையம் அருகே நடந்து சென்றபோது 10 அடி தூரத்தில் அவரை வழிமறித்த ஜோசப் தன்னுடன் தொடா்ந்து பேசுமாறு நிா்பந்தம் செய்தாராம்.

ஷா்மிளா அவரைக் கண்டித்து விட்டு அங்கிருந்து செல்ல முயன்றபோது, புட்டியில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அவா் மீது ஜோசப் ஊற்றி தீ வைத்தாராம். ஷா்மிளாவின் உடலில் தீ பற்றி எரிந்தது. அலறித் துடித்த அவா், ஓடிச் சென்று ஜோசப்பை பிடித்துக் கொண்டாா்.

அங்கிருந்தவா்கள் ஓடி வந்து தீயை அணைத்து ஷா்மிளாவை மீட்டு ஆம்புலன்ஸில் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஷா்மிளா சனிக்கிழமை உயிரிழந்தாா். கையில் பலத்த தீக்காயமடைந்த ஜோசப் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் சரணடைந்தாா். போலீஸாா் அவரை ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக ஒதியஞ்சாலை போலீஸாா் ஜோசப் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.