விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கோயில் உண்டியலில் திருட்டு

திண்டிவனம் அருகே கோயில் உண்டியலைத் திறந்து பணம் திருடியது குறித்து வெள்ளிமேடுபேட்டை போலீஸார் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 3:14 am

தினமணி

திண்டிவனம் அருகே கோயில் உண்டியலைத் திறந்து பணம் திருடியது குறித்து வெள்ளிமேடுபேட்டை போலீஸார் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
 தாதாபுரத்தில் இருந்து கீழ்மலையனூர் செல்லும் வழியில் உள்ள அம்மன் கோயிலில் அதன் தர்மகர்த்தாவான கிருஷ்ணமூர்த்தி என்பவர் செவ்வாய்கிழமை மாலை வழக்கம் போலக் கோயிலைப் பூட்டிக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். புதன்கிழமை காலை வந்து பார்த்த போது, கோயில் வளாகத்தில் உள்ள உண்டியலின் பூட்டு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 தகவலறிந்து டி.எஸ்.பி. திருமால் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். விரல்ரேகை நிபுணர் சண்முகம் வந்து அந்த இடத்தில் தடையங்களைச் சேகரித்தார். இதுகுறித்த புகாரின் பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.