டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நிலவேம்புக் குடிநீர் வழங்குவது போன்றவை மேற்கொள்ளப்படும் என்று அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் கூட்டமைப்பின் மாவட்ட கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குக சரவணபவன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் சுருளிமலை, திண்டிவனம் வட்டத் தலைவர் ராமதாஸ், காணை வட்டத் தலைவர் கண்ணன், கோலியனூர் வட்டத் தலைவர் ராஜாராம், செஞ்சி வட்ட துணைத் தலைவர் பாபு, நிர்வாகிகள் சுப்பிரமணியன், தண்டபாணி, ஆறுமுகம், கோவிந்தராசு உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
சங்கம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நிலவேம்புக் குடிநீர் வழங்குதல், மாநிலத் தலைவர் சாமிநாதன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுதல், உறுப்பினர்களுக்கு குறிப்பேடு, நாள்காட்டி வழங்குதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








