ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அதிவேகமாக பைக் ஓட்டிய 6 இளைஞர்களுக்கு அபராதம்

திருவண்ணாமலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாக பைக் ஓட்டியதாக 6 இளைஞர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

Updated On :22 அக்டோபர் 2018, 3:58 am

திருவண்ணாமலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாக பைக் ஓட்டியதாக 6 இளைஞர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.
திருவண்ணாமலை நகர டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை - போளூர் சாலையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். 
அப்போது, 4 பைக்குகளில் 6 பேர் கூச்சலிட்டபடியும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச் சென்றனர்.
இவர்கள் 6 பேரையும் போலீஸார் வழிமறித்துப் பிடித்து, திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். 
பின்னர், 6 இளைஞர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் போலீஸார் அறிவுரை வழங்கினர். மேலும், 6 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.