கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

அதிவேகமாக பைக் ஓட்டிய 6 இளைஞர்களுக்கு அபராதம்

திருவண்ணாமலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாக பைக் ஓட்டியதாக 6 இளைஞர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

Updated On :22 அக்டோபர் 2018, 3:58 am

திருவண்ணாமலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாக பைக் ஓட்டியதாக 6 இளைஞர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.
திருவண்ணாமலை நகர டிஎஸ்பி அண்ணாதுரை தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை - போளூர் சாலையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். 
அப்போது, 4 பைக்குகளில் 6 பேர் கூச்சலிட்டபடியும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் அதிவேகமாக பைக்குகளை ஓட்டிச் சென்றனர்.
இவர்கள் 6 பேரையும் போலீஸார் வழிமறித்துப் பிடித்து, திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். 
பின்னர், 6 இளைஞர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் போலீஸார் அறிவுரை வழங்கினர். மேலும், 6 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.