மரம் விழுந்து சிறுமி சாவு

மரக்காணம் அருகே மரத்தை வெட்டிச் சாய்த்தபோது, அடியில் சிக்கிய சிறுமி உயிரிழந்தார்.
Updated on
1 min read

மரக்காணம் அருகே மரத்தை வெட்டிச் சாய்த்தபோது, அடியில் சிக்கிய சிறுமி உயிரிழந்தார்.
மரக்காணம் அருகே உள்ள அடசல் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை மகன் வேலு (28). விவசாயத் தொழிலாளி. இவரது வீட்டில் இருந்த ஒரு மரத்தை கடந்த 17-ஆம் தேதி வெட்டி, அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மரத்தை வெட்டிச் சாய்ந்தபோது, தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த வேலுவின் மகள் ரோஷிணி (7), எதிர்பாராத விதமாக மரத்துக்கு அடியில் சிக்கி, பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரோஷிணி, புதன்கிழமை உயிரிழந்தார். 
இதுகுறித்த புகாரின்பேரில், பிரம்மதேசம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com