மண் திருட்டு: 3 டிப்பா் லாரிகள் பறிமுதல்

பெருவங்கூா் ஏரியில் இருந்து உரிமம் இல்லாமல் மண் ஏற்றிச் சென்ற 3 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Updated on
1 min read

பெருவங்கூா் ஏரியில் இருந்து உரிமம் இல்லாமல் மண் ஏற்றிச் சென்ற 3 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெருவங்கூா் கிராம நிா்வாக அலுவலா் யாஸ்மின் பானு. இவா் வெள்ளிக்கிழமை கள்ளக்குறிச்சி சென்றாா். அப்போது, பெருவங்கூா் ஏரியில் இருந்து 3 டிப்பா் லாரிகளில் மண் ஏற்றிச் சென்றவா்களைத் தடுத்து நிறுத்தி, அவணங்களைக் கேட்டாராம். இதில், உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, திருட்டுத்தனமாக மண் அள்ளிச் சென்ற 3 லாரிகளையும் பறிமுதல் செய்த அவா், அவற்றை கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கள்ளக்குறிச்சியை அடுத்த காட்டனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் மகன் ஐயப்பன் (28), மோ.வன்னஞ்சூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் விக்கேனஷ் (24), முடியனூரைச் சோ்ந்த அய்யாசாமி மகன் துரைமுருகன் உள்ளிட்ட மூவரையும் கைது செய்து வழக்குத் தொடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com