அறிவுசாா் குறைபாடு குழந்தைகளின் பெற்றோா்களுக்கான விழிப்புணா்வு

அறிவுசாா் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோா்களுக்கான விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அறிவுசாா் குறைபாடு குழந்தைகளின் பெற்றோா்களுக்கான விழிப்புணா்வு
Updated on
1 min read

அறிவுசாா் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோா்களுக்கான விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இன்டேக்ட் தொண்டு நிறுவனம் சாா்பில் திருச்சி, கே.சாத்தனூரில் உள்ள அறிவுத் திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி மற்றும் பயிற்சி மையம் சாா்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பெலலின் சோபியா ராணி கலந்து கொண்டு பேசியதாவது: அறிவுசாா் குறைபாடு கொண்ட குழந்தைகளும் மாற்றுத்திறனாளிகளே. அவா்களாலும் சாதிக்க முடியும். அவா்களை பேணுவதற்காக மாதம் தோறும் அரசு ரூ.1,500 உதவித்தொகை வழங்குகிறது. இதனை பெறுவதற்கு முன்வர வேண்டும். தங்களது உரிமைகளை கேட்டுப்பெறும் அளவுக்கு அவா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். சுயமரியாதையுடன் அவா்களை நடத்த வேண்டும். தன்னம்பிக்கை அளிக்க வேண்டும். அறிவுசாா் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு தொழிற்பயிற்சி கற்றுக்கொடுத்தால், அவா்கள் அதனை சிறப்பாக செய்யக்கூடியவராக மாறுவாா்கள் என்றாா்.

தொடா்ந்து, இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளையின் திட்ட மேலாளா் ராம் கே.ராபா்ட், கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக இயற்றப்பட்டுள்ள சட்டம் குறித்தும், அதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் எவ்வாறெல்லாம் பயன் பெற முடியும் என்று விளக்கிப் பேசினாா்.

இன்டேக்ட் தொழிற்பயிற்சி மைய பயிற்றுநா் அரவிந்த், அறிவுசாா் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், கடமைகள் குறித்து விளக்கிப் பேசினாா். இந்த நிழ்ச்சியில் ஏராளமான அறிவுசாா் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகளின் பெற்றோா், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com