வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருக்கோவிலூர் அருகே முகையூர் ஒன்றியத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

திருக்கோவிலூர் அருகே முகையூர் ஒன்றியத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
முன்னதாக, தி.அத்திப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டம், 2018-19ன் கீழ் ரூ.1.50 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு பண்ணை குட்டைகளை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பார்வையிட்டார். 
இதைத் தொடர்ந்து, வீரபாண்டி ஊராட்சியில், ஊரக வேலை உறுதித் திட்டம் 2014-15ன் கீழ் ரூ.10 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட கோழிக் கொட்டகையையும், முன்மாதிரி கிராமத் திட்டம் 2016-17ன் கீழ் ரூ.3 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தானியக் களத்தையும் ஆய்வு செய்தார். 
மேலும், தண்டரை ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டம் 2017-18ன் கீழ் ரூ.3.50 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் தடுப்பு அணையையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மற்றும் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com